பதிவு செய்த நாள்
30
ஆக
2022
01:08
பல்லடம்: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பல்லடம் வட்டாரத்தில், 350க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. ஆக., 31 நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. பல்லடம் காவல்துறை உட்கோட்டத்தில், 35க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிசை செய்ய அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னேற்ற கழகம், பாரத மாணவர் பேரவை, பாரத் சேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்பின் சார்பில், பல்லடத்தில், காமநாயக்கன்பாளையம், அவிநாசிபாளையம் மற்றும் மங்கலம் பகுதிகளில், 350க்கும் அதிகமான சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. அரசு விதித்துள்ள விதிமுறைகளின்படியும், பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டும், சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. நாளை விநாயகர் சதுர்த்தி என்பதால், சிலைகளைப் பிரதிஷ்டை செய்வதற்கு உண்டான பணிகளில் அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளாக, விநாயகர் சதுர்த்தி விழா சரிவர கொண்டாடப்படவில்லை. எனவே, இம்முறை சிறப்பாக கொண்டாடவும் அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.