பதிவு செய்த நாள்
30
ஆக
2022
01:08
கள்ளிமந்தையம்: குளத்து புதூர் என்ற பாலப்பன்பட்டிபுதூரில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ துர்க்கை அம்மன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ காளியம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு விக்னேஸ்வர பூஜை, கோபுர கலசம் வைத்தல் நடந்தது. நேற்று முன் தினம் காலை பஞ்சகவ்யம், இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. மாலையில் மூன்றாம் காலையாக பூஜை நடந்தது. நேற்று அதிகாலை விக்னேஸ்வர பூஜை, நான்காம் கால யாக பூஜை நடந்தது. இதனைத் தொடர்ந்து கோயில் கலசங்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு ஆன்மீக நடனங்களோடு நாட்டுப்புற இன்னிசை, கச்சேரி, கிராமிய நாட்டுப்புற ஆடல் பாடல் நிகழ்ச்சி, பாட்டு பட்டிமன்றம், கிராமிய பாடலுடன் வள்ளி கும்மி நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் குளத்துப்புதூர் பொதுமக்கள் செய்திருந்தனர்.