மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலை சுத்தம் செய்யும் பெண்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஆக 2022 11:08
திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் மதுரையை சேர்ந்த அமைப்பு ஒன்று மாதம்தோறும் கோயில் வாளகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு பக்தர்களின் பாராட்டை பெற்று வருகிறது. மதுரை அன்னபூரணி உழவார பணி என்ற அமைப்பைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் தலைமையிலான பெண்கள் குழு ஒவ்வொரு மாதமும் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் வளாகத்தில் தேங்கும் குப்பைகள், கழிவுகளை அள்ளி தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து வருகின்றனர். உண்டியல் காணிக்கை பணத்தை எண்ணும் போதும் இக்குழுவில் உள்ள பெண்கள் இணைந்து கோயில் ஊழியர்களுடன் என்ணும் பணியில் ஈடுபடுகின்றனர். தன்னலம் பாராது செயல்படும் இந்த அமைப்பை பக்தர்கள் பாராட்டி வருகின்றனர்.