திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன் நகர் கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள கற்பக விநாயகர் சன்னதியில் உற்சவர் விநாயகர் விக்ரகம் மற்றும் கிராமத்தினர் சார்பில் கொடுக்கப்பட்ட களிமண் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டு பூஜை நடந்தது. கோயில் மண்டபங்களில் எழுந்தருளியுள்ள விநாயகர், நேரில் உள்ள விநாயகர் சிலைகளுக்கு கொழுக்கட்டை படைத்து தீபாராதனை நடந்தது. கோயில் யானை தெய்வானைக்கு பரிவட்டம் கட்டப்பட்டு தீபாராதனை நடந்தது.
திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் ஆக. 26முதல் நடந்த லட்சார்ச்சனை, யாகசாலை பூஜை நிவர்த்தி செய்ய பூர்த்தி செய்யப்பட்டு, மூலவர், உற்சவருக்கு புனித நீர் அபிஷேகம் நடந்தது. மஹா கணபதி ஹோமத்தை தொடர்ந்து மாலையில் மூஷிக வாகனத்தில் சுவாமி விதி உலா நிகழ்ச்சியில் அருள்பாளித்தார். பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில் கணபதி ஹோமம், அபிஷேகம், சங்காபிஷேகம், சிறப்பு பூஜை முடிந்து மாலையில் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. திருநகர் மகாலட்சுமி காலனி வர சித்தி விநாயகர் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை முடிந்த பிரசாதம் வழங்கப்பட்டது.