நயினார்கோவில் வாலேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06செப் 2022 01:09
நயினார்கோவில்: நயினார்கோவில் ஒன்றியம் பெரிய அக்கிரமேசி கிராமத்தில் அருள் பாலிக்கும் வாலேஸ்வரி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
இக் கிராமத்தில் அருள் பாலிக்கும் வாலேஸ்வரி அம்மன், கருப்பசாமி, இருளப்பசாமி, வீரமாகாளி, ராக்கச்சி, இருளாயி அம்மன், சோனையா ஆகிய பரிவார தெய்வங்களுக்கு செப். 3 அன்று யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து நான்கு கால யாகா பூஜைக்கு பின், நேற்று காலை 10:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. ராமநாதபுரம் அரண்மனை சிவன் கோயில் மனோகர குருக்கள், பிள்ளையார்பட்டி மகேஷ் சிவம் தலைமையிலான குருக்கள் நடத்தி வைத்தனர். பல்வேறு ஊர்களில் வசிக்கும் குடிமக்கள், கிராம மக்கள் சாமி தரிசனம் செய்தனர். கோயில் தலைவர் அருணாச்சலம், செயலாளர் பாலு உள்ளிட்ட விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்தனர்.