பாலப்பநாயக்கன்பட்டி முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக தீர்த்த ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06செப் 2022 01:09
நத்தம், நத்தம் பாலப்பநாயக்கன்பட்டி முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக தீர்த்த ஊர்வல நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம் கலந்து கொண்டார்.
இக்கோவில் கும்பாபிஷேகம் செப்.7 ல் நடக்க உள்ளது. இதற்காக கோவில் முன் யாகசாலை அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி தீர்த்த ஊர்வலம் நேற்று நடந்தது. முன்னதாக ராமேஸ்வரம், கொடுமுடி, அழகர் கோவில், கைலாசநாதர் கோவில், கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புனித தீர்த்தங்கள் எடுத்து வரப்பட்டது. இதனை நத்தம் அரண்மனை சந்தனகருப்புசாமி கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின் மேளதாளம், அதிர்வேட்டுகள் முழங்க, ஆட்டம் பாட்டத்துடன் தீர்த்தம் ஊர்வலமாக பாலப்பநாயக்கன்பட்டி கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் கலந்து கொண்டனர்.