பதிவு செய்த நாள்
06
செப்
2022
01:09
தஞ்சாவூர், திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில், அர்ச்சகர் நியமனத்தில், அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு முறைகேடாக நியமனம் செய்த முயன்ற நிலையில், அகில பாரத இந்து மகாசபா போராட முயன்றதால், அதிகாரிகள் பணியானை நிறுத்தி வைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி(ராகு ஸ்தலம்) கோவிலில், கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி, மூர்த்தி என்பவரை எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி அர்ச்சகராக பணியமர்த்த அறநிலையத்துறை மயிலாடுதுறை மண்டல இணை ஆணையர் மோகனசுந்தரம், கோவில் உதவி ஆணையர் உமாதேவி, மேலாளர் நடராஜன் ஆகியோர் பல லட்சம் பெற்றுக்கொண்டு பணியமர்த்த முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த அகில பாரத இந்து மகா சபாவினர், கோவிலில் முற்றுகை போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை சமதானம் செய்து வைத்து அனுப்பி வைத்தனர். இருப்பினும், இணை ஆணையர் மோகனசுந்தரம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, மூர்த்தியை பணியில் அமர்த்த ஏற்பாடு செய்துள்ளார். இது குறித்து, அகில பாரத இந்து மகா சபா ஆலயப் பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் நிரஞ்சன் முதல்வர் ஸ்டாலினுக்கு மனு ஒன்றை அனுப்பினார். மேலும், காலை திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவில் அலுவலகம் முன்பு சங்கு ஊதி போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது, கோவில் உதவி ஆணையர் உமா தேவி, அனைத்து பணியாணையையும் ரத்துவதாகவும், முறையாக அர்ச்சகர் நியமனம் செய்வதாக உறுதியளித்த நிலையில், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.