பத்மநாபபுரம் அரண்மனையில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06செப் 2022 02:09
தக்கலை: திருவோண பண்டிகையையொட்டி பத்மநாபபுரம் அரண்மனையில் ஊழியர்கள் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் விழாவை கொண்டாடினர். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை மறுநாள் (8ம் தேதி) திருவோண பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்து வருகின்றனர். பத்மநாபபுரம் அரண்மனை இத் திருவிழாவையொட்டி வ ண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது . நேற்று அரண்மனை ஊழியர்கள் சார்பில் அத்தப்பூ கோலமிடப்பட்டது. இந்த அத்தப்பூகோலத்தை திரளானமக்கள் கண்டு களித்தனர். தொடர்ந்து ஓணத் திருவிழாவை அரண்மனை கண்காணிப்பாளர் அஜித்குமார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். ஏராளமான மக்கள் ஓண ஊஞ்சலாட்டதில் ஈடுபட்டனர். தொடர்ந்து அரண்மனை ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி நடந்தது. ஓண விருந்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. மாலையில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.