பதிவு செய்த நாள்
06
செப்
2022
07:09
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் இன்று முதல் 6.9.2022 தொடங்கி 5 நாட்களுக்கு 10.9.2022 ஆம் தேதி வரை கோயிலில் பவித்ர உற்சவங்கள் நடைபெறுகிறது. கோயிலில் ஒவ்வொரு ஆண்டுதோறும் இந்த சிறப்பு உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று கோயில் வளாகத்தில் தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் ஸ்ரீ -(சிலந்தி )காள- (பாம்பு )ஹஸ்தி (யானை) போன்ற உற்சவமூர்த்திகள் உட்பட பரத்வாஜ் மகரிஷியின் உற்சவ சிலைக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது.முன்னதாக நேற்று திங்கட்கிழமை 5 .9. 2022 அன்று சுவாமி - அம்மையார்களுக்கு பயன்படுத்தும் கவசங்கள், தூப, தீப, நெய்வேத்தியங்களுக்கு பயன்படுத்தும் பொருட்கள், அலங்கார (பொருட்கள்) சாமான்களை கோயில் ஊழியர்கள் சுத்தப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து இன்று அதனைப் பயன்படுத்தி பவித்ரோற்சவத்தை தொடங்கி கோயில் வேதப் பண்டிதர்கள் தொடங்கினர். கோயில் வளாகத்தில் தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் முன்னதாக பல்வேறு சிறப்பு வாசனை திரவியங்களால் (பன்னீர், மஞ்சள், சந்தனம் , விபூதி,குங்குமம் ,இளநீர் ,பால், தயிர் ,பஞ்சாமிர்தம் போன்றவைகளால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. பின்னர் கோயில் வேத பண்டிதர்கள் மகாதீபாரதனையை தொடர்ந்து நெய்வேத்தியங்களை சமர்ப்பித்தனர் .இந்நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசலு மற்றும் உறுப்பினர்கள், கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கலந்துக் கொண்டனர்.