சதுரகிரி ஆவணி பவுர்ணமி வழிபாடு; மழை பெய்தால் அனுமதி இல்லை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07செப் 2022 07:09
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்கு பக்தர்கள் நாளை (செப்டம்பர் 8) முதல் 11ஆம் தேதி முடிய 4 நாட்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், மழை பெய்தால் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் அமாவாசை, பவுர்ணமி வழிபாட்டை முன்னிட்டு பிரதோஷ நாள் முதல், நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன்படி ஆவணி மாத பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டிற்கு தற்போது வனத்துறை அனுமதித்துள்ள நிலையில், தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். மழை பெய்து ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டால் பக்தர்கள் மலையேறு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.