பெரியகுளத்தில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07செப் 2022 10:09
பெரியகுளம்: பெரியகுளம் வணிக வைசியகுல சங்கத்தில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பெரியகுளம் தென்கரை வணிக வைசியகுல அபிவிருத்தி சங்கத்தின் மேற்பார்வையில் 43வது ஆண்டு பிட்டு உற்சவ விழா நடந்தது. தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் வேல்முருகன், நிர்வாகஸ்தர்கள், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சோமசுந்தர கடவுள் (சிவன்) வந்தி என்னும் பக்தைக்கு பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சியை அர்ச்சர்கள் செய்து காண்பித்தனர். முன்னதாக மீனாட்சிஅம்மன் கோயிலில் இருந்து சுந்தரேசபெருமாள், மீனாட்சி அம்மன், பாலசுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தனர். பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்கள் கவுரவிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு பிட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.