வில்லியனூர்: வில்லியனூர் மூர்த்தி நகர் மாரியம்மன் கோவில் 42ம் ஆண்டு உற்சவ விழா இன்று துவங்குகிறது. அதிகாலை 4.30 மணிக்கு மேல் கணபதி ஹோமம் மற்றும் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. தொடர்ந்து நாளை (20ம் தேதி) காலை 9 மணிக்கு ஐயனாரப்பனுக்கு ஊரணிப் பொங்கல், பகல் 2 மணிக்கு அபிஷேகத்துடன் தீபாராதனை, இரவு 9 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடக்கிறது. வரும் 21ம் தேதி காலை சங்கராபரணி ஆற்றங்கரையில் இருந்து சக்தி பூங்கரகம் ஊர்வலமும், பகல் ஒரு மணிக்கு சாகை வார்த்தலும், இரவு 8 மணிக்கு மேல் அலங்கரித்த அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது.