கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விநாயகருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13செப் 2022 06:09
ஆவணி மாத மகா சங்கடகர சதூர்த்தியையொட்டி உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சந்தனகாப்பு அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார்.
சோழவந்தான் படித்துறை வரத விநாயகர் கோயிலில் உலக நன்மை வேண்டி சங்கடகர சதுர்த்தி பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரம், அபிஷேக, ஆராதனைகளை கார்த்திக் பட்டர் செய்தார். ஏற்பாடுகளை மலையாளம் கிருஷ்ணய்யர் டிரஸ்ட் பொது மேலாளர் பாலசுப்பிரமணியன் செய்தார். நாகமலை புதுக்கோட்டை ஆனந்த ஐயப்பன் கோயிலில் கற்பக விநாயகருக்கு சிறப்பு பூஜைகளை சுந்தர் பட்டர் செய்தார். ஏற்பாடுகளை சோமசுந்தரம் செய்திருந்தார். குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகளை கோயில் நிறுவனர் கோபிநாத் செய்தார். பிரசாதம் வழங்கப்பட்டது.