பதிவு செய்த நாள்
14
செப்
2022
04:09
கமுதி : கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் அழகுவள்ளி அம்மன் கோயில் பொங்கல் மற்றும் முளைப்பாரி விழா நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர்.
தினந்தோறும் அம்மனுக்கு சிறப்புபூஜைகள் நடந்தது. பெண்கள் கும்மியடித்தும், ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும் வந்தனர். இந்நிலையில் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் வினோதமான முறையில் உடலில் ஊசி குத்தியும், உடல் முழுவதும் சேறு பூசி சேத்தாண்டி வேடம் அணிந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அக்னிசட்டி, பால்குடம் எடுத்து வந்து பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்பு அழகுவள்ளி அம்மனுக்கு பால், சந்தனம்,மஞ்சள் உட்பட 21 வகையான அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. முளைக்கட்டு திணையிலிருந்து கிராமமக்கள் முளைப்பாரி தூக்கி ஊர்வலமாக சென்று ஊரணியில் கரைத்தனர். விழாவில் கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.