பழநி: பழநி மலைக்கோயிலில் 3வது வின்சின் ரோப் மாற்றும் பணி நடை பெறுகிறது. பழநி மலைக்கோயில் சென்று வர வின்ச், ரோப் கார், படிப்பாதை ஆகியவற்றை பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் மூன்று வின்ச்கள் பழநி மலைக்கோயிலில் உள்ளன. மூன்றாவது வின்ச்சின் ரோப் பழுதடைந்ததால் சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தரமுள்ள 450 மீட்டர் நீளமுள்ள ரோப் வரவழைக்கப்பட்டு மாற்றும் நடைபெற்று வருகின்றன. ரூ.5 லட்சம் மதிப்பிலான இரண்டு ரோப்க்கள் வாங்கப்பட்டுள்ளன. அவற்றில் தற்போது ஒரு ரோப் மாற்றப்பட்டு வருகிறது. பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்பு மூன்றாவது வின்ச் சேவை செயல்படும்.