மாரியம்மன் கோயில் திருவிழா : 101 பானை பொங்கல் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21செப் 2022 10:09
திருவாடானை : திருவாடானை தெற்கு ரதவீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் திருவிழா செப்.13ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று மாலை 101 பானைகளில் பொங்கல் வைத்து பெண்கள் வழிபட்டனர்.அம்மன் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.