மதுரை : மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சங்கம் சார்பாக ஆவணி மாத பூர்ணிமா அன்று ருத்ர பசுபதீஸ்வரர் பூஜை நிலவு வழிபாடு நடந்தது.ஆதிசங்கரர் அருளிய பசுபதி அஷ்டகம், வள்ளலார் அருளிய சவுந்திரமாலை, திருவடிப்புகழ் மாலை, மகதேவமாலை, ருத்ர கவசம், தேவார பதிகங்கள் பாராயணம் செய்யப்பட்டன. பிரார்த்தனையை சன்மார்க் சேவகர் ஜோதி ராமநாதன் நடத்தினார். ஜனனி ரத்னேஸ்வரி ஜோதி ஆராதனை செய்தார்.