பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.ஒரு கோடியே 89 லட்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22செப் 2022 07:09
பழநி: பழநி மலைக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.ஒரு கோடியே 89 லட்சத்து 69 ஆயிரம் கிடைத்துள்ளது. பழநி மலைக்கோயிலில் நேற்று (செப்.21 ல்.) உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் காணிக்கையாக 883 கிராம் தங்கமும், 13 ஆயிரத்து நூற்று 997 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ.ஒரு கோடியே 89 லட்சத்து 69 ஆயிரத்து 700 ,மற்றும் 2042 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் இணை ஆணையர் நடராஜன், உட்பட அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்றும் உண்டியல் எண்ணிக்கை உள்ளது.