Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.ஒரு ... செங்கல் சிவபார்வதி கோவில் நவராத்திரி விழா செங்கல் சிவபார்வதி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டுப்பாளையம் அருகே குறிஞ்சீசுவரர் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
மேட்டுப்பாளையம் அருகே குறிஞ்சீசுவரர் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

22 செப்
2022
07:09

மேட்டுப்பாளையம்: குறிஞ்சி நகரில், புதிதாக கட்டிய குறிஞ்சிநாயகி அம்மன் உடனமர் குறிஞ்சீசுவரர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையம் புதூரில் குறிஞ்சி நகர் உள்ளது. இங்கு புதிதாக குறிஞ்சிநாயகி அம்மன் உடனமர், குறிஞ்சீசுவரர் (சிவன்) கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா, 20ம் தேதி துவங்கியது. முந்து தமிழால் முதற்கால வேள்வி பூஜையும், பேரொளி வழிபாடும் நடந்தது. நேற்று காலை, 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், மூல மூர்த்திகளுக்கு காப்பும் அணிவிக்கப்பட்டது. பின்பு இரண்டாம் கால வேள்வி பூஜை நடந்தது. பின்னர், யாக வேள்வி சாலையில் இருந்து, கோவிலைச் சுற்றி, தீர்த்த குடத்தை ஊர்வலமாக எடுத்து வந்து, மூலவர் சிலை முன்பு வைத்தனர். பின்னர் மூலவர் சிலை மீது, புனித தீர்த்தத்தை ஊற்றி, கும்பாபிஷேகம் செய்தனர். அருளாளர்களின் அருளுரையும், பெருந்திருமஞ்சனம், பேரொளி வழிபாடும், திருமுறை விண்ணப்பம் ஆகிய வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக வேள்விப் பணிகளை பவானியை சேர்ந்த சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளையினர் செய்தனர். தெய்வீக சித்தாந்த இலக்கிய மன்ற தலைவர் ஒளியரசு, சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளை தலைவர் தியாகராசன் ஆகியோர், சுவாமி மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். விழாவில் ஜடையம்பாளையம் ஊராட்சி தலைவர் பழனிசாமி, முன்னாள் தலைவர் ராஜேஸ்வரி, துணை தலைவர், வார்டு உறுப்பினர், திருஞானசம்பந்தர் சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளையினர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar