விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் உண்டியலை திறந்து காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலாகியோர் முன்னிலையில், 9 நிரந்தர உண்டியல், 1 திருப்பணி உண்டியல் என 10 உண்டியல்கள் திறக்கப்பட்டன. காணிக்கையை எண்ணும் பணியில், அர்த்த ஜாம அடியார் குழுவினர் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். 9 லட்சத்து 2 ஆயிரத்து 888 ரூபாய் ரொக்கம், 12 கிராம் தங்கம், 115 கிராம் வெள்ளி பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.