பதிவு செய்த நாள்
22
செப்
2022
01:09
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், கிருஷ்ண பக்ச ஏகாதசி வைபவம் நடந்தது. கோவை மாவட்டத்தில், வைணவ ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவில். புரட்டாசி மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி வைபவத்தை முன்னிட்டு, அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், கால சந்தி பூஜை, விஸ்வக்சேனர் பூஜை, புண்ணியா வசனம், கலச ஆவாகனம், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர், திருமஞ்சனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது வேத பாராயணம், பஞ்ச சுத்த பாராயணம் ஆகிய பாசுரங்கள் சேவிக்கப்பட்டன. பின்பு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாளுக்கு ஸ்தபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. வெண் நிற பட்டு உடுத்தி, வெள்ளி சிம்மாசனத்தில், அரங்கநாத பெருமாள் கோவிலில் வலம் வந்தார். பின்பு உச்ச கால பூஜை, சற்று முறை சேவித்த பின்பு, மங்கல தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இவ்வைபவத்தில் கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், கோவில் அலுவலர்கள் என, ஏராளமான பக்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.