வரசித்தி விநாயகர் கோயிலில் ஆந்திர பஞ்சாயத்து ராஜ் துறை முதன்மை செயலாளர் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22செப் 2022 01:09
காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் ஆந்திர மாநில பஞ்சாயத்து ராஜ் துறை முதன்மை செயலாளர் கோபாலகிருஷ்ணா திவேதி சாமி தரிசனம் செய்ய இன்று கோயிலுக்கு வந்தவரை தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசனம் ஏற்பாடுகளையும் செய்தனர் .கோயிலுக்குள் சென்றவர் விநாயகரை தரிசனம் செய்தவருக்கு கோயில் அறங்காவலர் குழு தலைவர் மோகன் ரெட்டி மற்றும் கோயில் அதிகாரிகள் கோபாலகிருஷ்ணா திவேதிக்கு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர்.