Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேட்டுப்பாளையம் குறிஞ்சீசுவரர் ... பத்திரகாளி அம்மன் கோவில் திருவிழா : அம்மனுக்கு அபிஷேகம் பத்திரகாளி அம்மன் கோவில் திருவிழா : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவனந்தபுரத்துக்கு இன்று நவராத்திரி பவனி: சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை புறப்பாடு
எழுத்தின் அளவு:
திருவனந்தபுரத்துக்கு இன்று நவராத்திரி பவனி: சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை புறப்பாடு

பதிவு செய்த நாள்

23 செப்
2022
06:09

நாகர்கோவில்:  பத்மனாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இன்று நவராத்திரி பவனி புறப்படுகிறது. இதற்காக சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை விக்ரகம் நேற்று காலை புறப்பட்டது.


திருவிதாங்கூர் ராஜ்யத்தின் தலைநகராக விளங்கிய பத்மனாபபுரம் அரண்மனை வளாகத்தில் கவியரசர் கம்பர் வழிப்பட்ட சரஸ்வதிதேவி கோயில் உள்ளது. மன்னர் காலத்தில் இங்கு நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பின்னர் நிர்வாக வசதிக்காக தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்ட போது, மன்னர் உத்தரவின் பேரில் சரஸ்வதி விக்ரகம் திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டு அங்கு நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. மன்னர் காலத்துக்கு பின்னரும் இந்த மரபு மாறாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வரும் 26–ம் தேதி தொடங்க உள்ள இந்த விழாவுக்காக பத்மனாபபுரத்தில் இருந்து இன்று காலை 7:30 மணிக்கு பவனி புறப்படுகிறது. இதற்காக சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை விக்ரகம் நேற்று காலை புறப்பட்டது. பல்லக்கில் கொண்டு வரப்பட்ட தேவிக்கு போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்திய பின்னர் நாகர்கோவில் வழியாக குமாரகோயில் சென்றது. இன்று காலை குமாரகோயில் முருகன் மற்றொரு பல்லக்கில் பத்மனாபபுரம் புறப்ட்டு செல்வார். நவராத்திரி பவனியில் சரஸ்வதிதேவிக்கு துணையாக செல்வதாக ஐதீகம். கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா காரணமாக கட்டுப்பாடுகளுடன் இந்த பவனி நடைபெற்றது. இந்த ஆண்டு பழையது போல் பவனி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நடைபெறும் தொடக்க விழாவில் தமிழக–கேரள அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar