Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண ... பண்ணாரியில் குவிந்த பக்தர்கள் : காத்திருந்து சுவாமி தரிசனம் பண்ணாரியில் குவிந்த பக்தர்கள் : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏழுமலையான் கோவிலுக்குரூ 86 ஆயிரம் கோடி சொத்து
எழுத்தின் அளவு:
ஏழுமலையான் கோவிலுக்குரூ 86 ஆயிரம் கோடி சொத்து

பதிவு செய்த நாள்

26 செப்
2022
08:09

திருமலை : “திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, நாடு முழுதும், 85 ஆயிரத்து 705 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் உள்ளன,” என, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் ஒய்.வி.சுப்பா ரெட்டி கூறினார்.திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர்கள் குழு கூட்டம், அதன் தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டம் முடிந்ததும் அவர் கூறியதாவது:

பிரம்மோற்சவம் மற்றும் புரட்டாசி மாதம் முடிந்த பின், அதிகாலையில் அனுமதிக்கப்படும் வி.ஐ.பி., பிரேக் தரிசனத்தை, காலை 10 - 12 மணி வரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், இரவில் இருந்தே காத்திருக்கும் பக்தர்கள், அதிகாலையில் இருந்தே தரிசனம் செய்ய முடியும். அதேபோல், தினமும் 20 ஆயிரம் சர்வ தரிசன டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், டோக்கன் இல்லாமல், நேரடியாக திருமலைக்கு வந்தும் சர்வ தரிசனம் வாயிலாக சுவாமி தரிசனம் செய்யலாம். புரட்டாசி முடிந்த பின், தங்கும் அறைக்கான டிக்கெட் திருப்பதியிலேயே வழங்கப்படும்.ஏழுமலையான் கோவில் சொத்து மதிப்பு, கடந்த மூன்று ஆண்டுகளாக இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் நிலம், வீட்டுமனை போன்ற அசையா சொத்துகள் உள்ளன. சுவாமி பெயரில், மொத்தம் 960 அசையா சொத்துகள் உள்ளன. இவற்றின் இன்றைய மதிப்பு, 85 ஆயிரத்து 705 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கூழ் படைத்து ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆடி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருப்புவனம்; ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar