Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... கும்பகோணம் சரஸ்வதி பாடசாலையில் மாணவ மாணவிகளுக்கு பரிசு கும்பகோணம் சரஸ்வதி பாடசாலையில் மாணவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனூரில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் கொட்டும் மழையிலும் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
மேல்மலையனூரில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் கொட்டும் மழையிலும் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

26 செப்
2022
05:09

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன் தினம் நடந்த புரட்டாசி மாத மாகாளய அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராமான பக்தர்கள் குவிந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு புரட்டாசி மாத மாகாளய அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அன்று காலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம், விசேஷ அர்ச்சனை நடந்தது. இரவு 11.20 மணிக்கு உற்சவர் அங்காளம்மன் வைஷ்ணவி தேவி அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூரதீபமேற்றி வழிபட்டனர். பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பக்தி, தாலாட்டு பாடல்களை பாடினர். இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம் அறங்காவலர் குழு தலைவர் சந்தானம் மற்றும் அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். நேற்று மேல்மலையனூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் மாலை 5.30 மணிக்கு துவங்கி இரவு 8.30 மணி வரை மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையையும் பொருட் படுத்தாமல் வழக்கத்தை விட கூடுதலாக பக்தர்கள் குவிந்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்; சோமங்கலத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில், இன்று கருட சேவை உற்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar