Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலை ஏழுமலையான் ... பழநியில் நவராத்திரி விழா துவங்கியது: அரோகர கோஷத்துடன் பக்தர்கள் பரவசம் பழநியில் நவராத்திரி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழநி ஆண்டவர் கோவிலில் ‘சக்தி கொலு’ கோலாகல துவக்கம்
எழுத்தின் அளவு:
வடபழநி ஆண்டவர் கோவிலில் ‘சக்தி கொலு’ கோலாகல துவக்கம்

பதிவு செய்த நாள்

27 செப்
2022
07:09

சென்னை; வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா நேற்று கோலாகலமாக துவங்கியது.சென்னை மாநகரில் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றாக, வடபழநி ஆண்டவர் கோவில் விளங்குகிறது. கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.இந்தாண்டிற்கான விழா, சக்தி கொலு எனும் பெயரில் நேற்று துவங்கியது. இதை, பிரபல கர்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதன், கோவில் தக்கார் இல.ஆதிமூலம், சுதா ஆதிமூலம், கோவில் துணைக் கமிஷனர் முல்லை, கர்நாடக இசைக் கலைஞர் அருண் மற்றும் பக்தர்கள் அபர்ணா, அனுராதா ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். அக்., 4ம் தேதி வரை நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு அருணின் இசைக் கச்சேரி நடந்தது.நவராத்திரி விழாவில், காலை 11:00 மணி முதல் 11:30 மணி வரையிலும் மாலை 6:00 மணி முதல் 6:30 மணி வரையிலும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடத்தப்படுகிறது. தினமும் மாலை 4:00 மணி முதல் 5:00 மணி வரை, 108 நபர்கள் கொண்ட குழுவினரால் லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடத்தப்படுகிறது.மாலை 5:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை வேத பாராயணம், ஸ்ரீ ருத்ரம், சமஹம், ஸ்ரீ சுக்தம் நடக்கிறது. மாலை, 6:30 மணி முதல் 7:00 மணி வரை சிறப்பு குழுவினரின் கொலு பாட்டு நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு இசைக் கச்சேரி, நாமசங்கீர்த்தனம், சொற்பொழிவு நடக்கிறது.

ஏகதின லட்சார்ச்சனை: நவராத்திரி சிறப்பு நிகழ்வாக, மீனாட்சி அம்மனுக்கு அக்., 2ம் தேதி, காலை 7:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரையிலும், மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் ஏகதின லட்சார்ச்சனை நடக்க உள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை ... மேலும்
 
temple news
பாலக்காடு : கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், 30 யானைகள் அணிவகுத்து நின்று ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு நடந்த ஜெயந்தன் பூஜை விழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar