பதிவு செய்த நாள்
02
அக்
2022
07:10
மேட்டுப்பாளையம்: தென்திருப்பதி கோவிலில், நவராத்திரி பிரம்மோற்சவம் விழாவில், நேற்று கருட வாகனத்தில், மலையப்ப சுவாமி எழுந்தருளினர்.
சிறுமுகை ஆலங்கொம்பு அருகே, ஜடையம்பாளையம் ஊராட்சி, தென் திருமலையில் தென் திருப்பதி வேங்கடேஸ்வர சுவாமி வாரி கோவில் உள்ளது. இந்த ஆண்டு நவராத்திரி பிரம்மோற்சவ விழா, கடந்த, 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் ஒவ்வொரு வாகனத்தில், மலையப்ப சுவாமி எழுந்தருளி, திருவீதி உலா நடைபெறு வருகிறது. நேற்று இரவு, 8:30 மணிக்கு கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். சிறப்பு பூஜை செய்த பின்பு, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை அனுமந்த வாகனத்தில் திருவீதி உலாவும், மாலையில் தங்க ரதத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. அக்., 4ம் தேதி காலை, 8:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி தேருக்கு எழுந்தருகிறார். அதைத் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கே.ஜி., குரூப் சேர்மன் பாலகிருஷ்ணன், மற்றும் கே.ஜி. டெனிம், கண்ணபிரான் மில்ஸ் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.