கொட்டாம்பட்டி: பூதமங்கலம், மம்மாணிபட்டியில் உள்ள செகுட்டு அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டி புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. மணியம்பட்டியில் இருந்து கிராமத்தார்கள் புரவிகளை 2 கி.மீ., துாரம் சுமந்து கோயிலுக்கு சென்றனர். அங்கு அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இத் திருவிழாவில் பூதமங்கலம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.