கோவையில் பெங்காலி சங்கம் சார்பில் துர்காதேவி உத்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03அக் 2022 09:10
கோவை: பெங்காலி சங்கம் சார்பில் துர்காதேவி உத்சவம், கோவை ராம்நகர் S.N.V.கல்யாண மண்டபத்தில் அக்டோபர் 1- ஆம் தேதி முதல் நடந்துவரு கிறது. இந்த நிகழ்வானது வரும் அக்டோபர் 9 ஆம் தேதி லஷ்மி பூஜையுடன் நிறைவுபெறுகிறது. இங்கு துர்காதேவி, விநாயகர் சிலைகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 9.30 மணி முதல் இரவு 7-30 மணிவரை பக்தர்கள் சுவாமிகளை தரிசிக்கலாம் என பெங்காலி சங்கம் சார்பில் தெரிவித்தனர்.