மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருமலை ஸ்ரீ வாரி ஆலயத்தில் புரட்டாசி மாத பிரம்மோற்சவ முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடந்தது. ஏராளமான பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதில் ஸ்ரீதேவி பூதேவி மலையப்ப ஸ்வாமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.