பதிவு செய்த நாள்
05
அக்
2022
11:10
திருப்பூர்: திருப்பூர் கோவில்களில், குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும், வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. விஜயதசமி அன்று, குழந்தைகளுக்கு எழுத்தறிவுக்கும் வித்யா ரம்பம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. திருப்பூர் ஐயப்பன் கோவிலில் நடந்த அந்நிகழ்ச்சியில், குழந்தைகளின் நாக்கில் தேன் தொட்டு வைத்து, தங்க ஊசியால் "ஹரி ஓம் நமக என எழுதப்பட்டு, அரிசியில் குழந்தைகள் கை பிடித்து, "அ எழுதப்பழக்கி விடப்பட்டது. இதையொட்டி, கோவிலில் சிறப்பு பூஜையும் நடந்தது. காலை 6.00 முதல் நடந்த இந்நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கு, வித்யாரம்பம் நடந்தது. பங்கேற்றவர்களுக்கு, சிலேட், பென்சில், வாய்ப்பாடு, புத்தக பை ஆகியவை வழங்கப்பட்டன.