வேடசந்தூர்: நாகம்பட்டி ஊராட்சி நாகம்பட்டியில், ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் திருக்கோவிலில் ஆயுத பூஜை மற்றும் நவராத்திரி விழா கொண்டாட்டம் நடந்தது. குரும்பா இன சூரியகுல, ஆரியகுல பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பில் நடைபெற்ற விழாவில், சக்தி கிணற்றுக்கு எழுந்தருளல், சிறப்பு பூஜை, அம்பு போடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து, கோயில் முன்பு பக்தர்களுக்கு தலையில் தேங்காய் உடைத்தல் நிகழ்ச்சி நடந்தது. கூடுதலான மக்கள் சுற்றி நின்று கண்டு களித்தனர். அன்னதானம் நடந்தது.