பதிவு செய்த நாள்
05
அக்
2022
01:10
மதுரை : மேலூர் வட்டம், தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி திருக்கோயிலில் புரட்டாசி மாதம் நவராத்திரி கொலு விழா பத்தாம் நாள் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும், விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், கொரோனா தொற்று நோயிலிருந்து மக்கள் விடுபடவும், சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. காலை 09.00 மணிக்கு, திருக்கோயிலில் அருள்பாலிக்கும் அருள்மிகு கோமதி அம்மனுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகவ்யம், பச்சரிசி மாவு, திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு, பழச்சாரு, பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர், திருநீர் போன்ற பதினாறு வகையான அபிக்ஷேகங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பள்ளி செல்லும் குழந்தைகளுடன், அவர்களின் பாடப் புத்தகங்கள் வைத்து, விஜயதசமி பூஜை சிறப்பாக நடைபெற்றது. குழந்தைகளுக்கு நோட்டு, பேனா, பிரசாதம் வழங்கப்பட்டது. நவராத்திரி கொலு பத்தாம் நாளான, இன்று கிசாசுரமர்த்தினி அலங்காரத்தில் கோமதி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்களுக்கு சர்க்கரைப் பொங்கல், அவல் பொரி, பழங்கள் வழங்கப்பட்டது. பக்தர்கள் நவராத்திரி அம்மன் பாடல்கள், துர்கை அம்மன் 1008 போற்றி, பாடினார்கள். திருக்கோயில் அர்ச்சகர் ராஜேஷ் , சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.