Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் ... சதுரகிரி கோயிலில் நவராத்திரி விழா; அம்மன் அம்பு விடுதலுடன் நிறைவு சதுரகிரி கோயிலில் நவராத்திரி விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி அண்ணன் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
சீர்காழி அண்ணன் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

06 அக்
2022
07:10

மயிலாடுதுறை: சீர்காழி அடுத்த அண்ணன் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள்  வடம்பிடித்து தேர் இழுத்து வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த அண்ணன் கோயில் என்றழைக்கப்படும் திருவெள்ளக்குளம் கிராமத்தில் 108 வைணவத் திருத்தலங்களில் 39வது திவ்யதேசமான, குமுதவல்லி தாயார் சமேத ஸ்ரீஅண்ணன் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.குமுதவள்ளி தாயார் அவதரித்த இத்தலத்தில் அண்ணன் பெருமாளை வேண்டி திருமங்கை ஆழ்வார் 10 பாசுரங்கள் பாடி மங்களாசாசணம் செய்துள்ளார். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலில் ஆண்டு தோறும் திருப்பதியை போன்று புரட்டாசி மாதம் 12நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு பிரம்மோற்சவம் கடந்த மாதம் 27ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் பெருமாள் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை, வழிபாடு, கருடன், குதிரை போன்ற வாகனங்களில் வீதியுலா  நடைபெற்று  வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை  தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது முன்னதாக சீதேவி, பூதேவி சமேத உற்சவர் அண்ணன்  பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை நடைபெற்றது. தொடர்ந்து மலர்கள் ஆபரணங்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. பின்னர்  சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருள ,தொடர்ந்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர் . நான்கு  வீதிகளின் வழியாக தேர் வலம் வந்து பிற்பகல் மீண்டும் நிலையை வந்தடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar