பதிவு செய்த நாள்
23
ஆக
2012
11:08
குருவாயூர்: குருவாயூர் கிருஷ்ணனுக்கு, அடுக்கு மாடி குடியிருப்பில், 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள, ஒரு அறை கொண்ட வீட்டை, பக்தை ஒருவர் காணிக்கையாக வழங்கினார். கேரளா, திருச்சூர் மாவட்டம், குருவாயூரில் பிரசித்திப் பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் யானை, மாடு போன்ற விலங்குகளையும், தங்கம், வெள்ளி உட்பட பல்வேறு பொருட்களை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். அவ்வாறு, எர்ணாகுளம், வைப்பின் பகுதியைச் சேர்ந்த எம்.பி.மைத்ரி என்பவர், காணிக்கையாக வீடு ஒன்றை வழங்கினார்.இதற்கான வீடு, குருவாயூரில் மேற்கு நடை பகுதியில், கட்டப்பட்டுள்ள ஸ்டெர்லிங் ஜோதி அடுக்கு மாடி குடியிருப்பில், ஒரு அறையும், சிறிய கூடம் மற்றும் சமையலறை வசதி கொண்ட, எப்-5, என்ற வீட்டை காணிக்கையாக வழங்கி உள்ளார். இந்த வீடு, 15 லட்ச ரூபாய் மதிப்புடையது. நேற்று முன்தினம் கோவிலில், கொடி மரத்தின் அருகே, இந்த வீட்டின் சாவி உட்பட அனைத்து ஆவணங்களையும், அவர், குருவாயூர் தேவஸ்தான அதிகாரிகளிடம் வழங்கினார்.