பெரம்பலூர்: எளம்பலூர் பிர ம்மரிஷிமலை அடிவாரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள காக ன்னை ஈஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.பெரம்பலூரை அடுத்த எளம்பலூரில் பிரசித்திப்பெற்ற பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் மகா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில், 75 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள காகன் னை ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா ஜூலை 8ம் தேதி விமர்சையாக நடந்தது. இதைத்தொடர்ந்து மண்டலாபிசேக விழாவை முன்னிட்டு தினமும் மாலை நேரத்தில் 210 சித்தர்கள் யாகமும், அன்னதானமும் நடந்தது. மண்டலாபிசேக நிறைவு விழா அன்னை சித்தர் ராஜ்குமார் குருஜி முன்னிலையில் நேற்று நடந்தது. விழாவில், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா நாடுகளை சேர்ந்த குருகடாட்சம் மெய்யன்பர்கள் திரளாக கலந்து கொண்டனர்.இதை முன்னிட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு 600க்கு ம் மேற்பட்ட சிறுவர், சிறுமியருக்கு பேனா, 200க்கும் மேற்பட்ட சாதுக்களுக்கு வஸ்திரதானங்களும் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை மகா சித்தர்கள் அறக்கட்டளை நிறுவனர் அன்னை ராஜ்குமார் சுவாமிகள், இயக்குனர் ரோகிணி மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.