பதிவு செய்த நாள்
24
ஆக
2012
10:08
சேலம்: சேலம் அருகே உள்ள பாகல்பட்டியில், சென்றாயபெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 20.62 ஏக்கர் புன்செய் நிலம், 92 ஆயிரத்து, 300 ரூபாய்க்கு குத்தகைக்கு விடப்பட்டது.சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில், சென்றாயபெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு விடுவதற்கான ஏலம், நேற்று நடந்தது. நாமக்கல் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கிருஷ்ணன், சேலம் இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் பழனியம்மாள், சேலம், சுகவனேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் பாஸ்கரன், ஓமலூர் ஆய்வாளர் தமிழரசு ஆகியோர் முன்னிலையில், ஏலம் நடந்தது.இந்த ஏலத்தில், 25க்கும் மேற்பட்டவர்கள் ஏலம் கோரினர். சென்றாய பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக பாகல்பட்டி, செல்லப்பிள்ளை குட்டை பகுதியில், 122 ஏக்கர் நிலம் உள்ளது. இதில், 100 ஏக்கர் நிலம், சில வாரங்களுக்கு முன், 6.5 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. புன்செய் நிலம் மட்டும் ஏலம் போகாமல் இருந்தது.நேற்று நடந்த ஏலத்தில், 20.62 ஏக்கர் புன்செய் நிலத்தை ஆண்டு குத்தகையாக, 92 ஆயிரத்து, 300 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. மூன்று ஆண்டு குத்தகைக்கு ஏலம் விடப்பட்ட நிலையில், ஒவ்வொரு ஆண்டும் குத்தகைக்கு விடப்பட்ட ஏல தொகையில் இருந்து, 10 சதவீதம் அதிகமாக குத்தகைதாரர்கள் செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.