வீரபத்திர சுப்ரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகை வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14அக் 2022 12:10
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம், கீழ்பட்டாம்பாக்கம் வீரபத்திர சுப்ரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு யாகம், 108 சங்காபிஷேகம் நடந்தது. மூலவர் வள்ளி தேவசேனா சமேதராய் சுப்ரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். உற்சவர் வள்ளி தேவசேனா சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை வலம் வந்து, அருள்பாலித்தார். பூஜைகளை லோகு குருக்கள் செய்தார். அருள்தரும் அய்யப்பன் கோவில், பூலோகநாதர், வரசித்தி விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.