Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ... ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் துவக்கம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீரங்கராய பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
சீரங்கராய பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

14 அக்
2022
07:10

மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே உள்ள சீரங்கராய பெருமாள் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

சிறுமுகை அடுத்த இலுப்பநத்தத்தில் ரங்கநாயகி சமேத சீரங்கராய பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் வீரமாஸ்தியம்மன் கோவில் டிரஸ்ட் சார்பில், திருக்கல்யாண உற்சவம் மற்றும் திருவீதி உலா நடந்தது. இன்று புரட்டாசி மாத ஐந்தாம் சனிக்கிழமை உற்சவ திருவிழா நடைபெறுகிறது. இன்று காலை, 7:00 மணிக்கு வாஸ்து சாந்தி, கங்கணம் கட்டுதல், திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை மற்றும் கணபதி ஹோமம், லட்சுமி குபேர ஹோமம், தீபாராதனை ஆகியவை நடந்தன. 10:00 மணிக்கு சுவாமி அழைப்பு நடந்தது. 11:00 மணிக்கு மேல் திருக்கல்யாண உற்சவ வைபவம் தொடங்கியது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சீரங்கராய பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் கோவில் மண்டபத்தில் எழுந்தருளினார். ராசடி ரகுநாதன் சுவாமிகள், விஜயகுமார் ரகுநாட் சுவாமிகள் முன்னிலையில், வெங்கட்ராமணய்யர் திருக்கல்யாண உற்சவ வைபவத்தை நடத்தி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு தன்னாசி சுவாமி, கருப்பராய சுவாமிக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் செய்யப்பட்டன. பின்பு சுவாமி திருவீதி உலா, இலுப்பநத்தம், எஸ். புங்கம்பாளையம், திம்மனூர் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. நாளை புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு அபிஷேக, அலங்கார பூஜை, மகா தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதைத் தொடர்ந்து கவாள பூஜை முடிந்த பின்பு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர், நிர்வாகிகள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; தீபாவளிக்கு ராம ஜென்மபூமி தயாராகி வருகிறது, ஸ்ரீ ராமர் மந்திரின் முதல் தளத்திலிருந்து ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar