பெருமாள் கோவில்களில் புரட்டாசி கடைசி சனிக்கிழமை பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2022 08:10
நத்தம், வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் கதிர் நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி அம்மன் ராமானுஜர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.
திருமஞ்சனம், விஸ்வரூப பூஜைகள் செய்யப்பட்டு சுவாமிக்கு தங்க கவசம் அணிவித்து, பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அபிஷேகம் மற்றும் தீபாவனை நடந்தது. ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் அறிவிக்கப்பட்ட சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தி.மு.க., மாவட்ட பொருளாளர் க.விஜயன் ஏற்பாட்டில் அன்னதானம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைப்போலவே வி.டி.பட்டி பெட்டி பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடந்தது. நத்தம் கோவில்பட்டி சத்தியபாமா சமேத ராஜ வேணுகோபால சுவாமி கோயிலிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் கருட வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது. வேம்பார்பட்டி வேங்கடேச பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் கருட வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது. செந்துறை அருகே ரெங்கையன் சேர்வைக்காரன்பட்டி மலை மேல் உள்ள மேலப்பெருமாள் கோவிலில் மழை வேண்டி வர்ண யாக பூஜை மற்றும் அன்னதானம் நடந்தது.