Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொடைக்கானல் வரதராஜ பெருமாள் ... வரசித்தி விநாயகர் கோயில் அன்னதானத் திட்டத்திற்கு நன்கொடை வரசித்தி விநாயகர் கோயில் அன்னதானத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆகமவிதி மீறல் : ராமேஸ்வரம் கோயில் நடை சாத்தாமல் திறப்பு
எழுத்தின் அளவு:
ஆகமவிதி மீறல் : ராமேஸ்வரம் கோயில் நடை சாத்தாமல் திறப்பு

பதிவு செய்த நாள்

16 அக்
2022
08:10

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் வருவாய் பெருக்கும் நோக்கில் ஆகம விதியை மீறி மதியம் 2 மணி வரை நடைசாத்தாமல் இருந்தது. இதுகுறித்து அதிகாரியிடம் பக்தர்கள் முறையிட்டனர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பல நூறு ஆண்டுகளாக ஆகம விதிப்படி காலை 5 மணி முதல் 6 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை, இதனைதொடர்ந்து கால பூஜை, மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை, தீபாரணை முடிந்ததும், மதியம் 12:50 மணிக்கு நடைசாத்தப்படும். இதன்பின் மதியம் 3 மணிக்கு நடை திறந்து சாயரக்சே, அர்த்தசாமம், பள்ளியறை பூஜை முடிந்ததும் இரவு 8:30 மணிக்கு நடை சாத்தப்படும். ஆனால் கடந்த இரு மாதமாக வெள்ளி, சனி, ஞாயிறில் மதியம் 2 மணி வரை நடை சாத்தாமல், திறந்து வைத்து பக்தர்கள் தரிசனத்திற்கு கோயில் நிர்வாகம் அனுமதித்தது. இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் சேர்ந்த புரோகிதர் கோபிஆச்சார், பக்தர்கள் சிலர் நேற்று மதியம் 1:30 மணிக்கு கோயில் சுவாமி சன்னதிக்கு வந்து கோயில் அதிகாரிகளிடம், ஆகமவிதியை மீறி இன்னும் ஏன் நடை சாத்தாமல் உள்ளீர்கள் , என முறையிட்டனர். அதற்கு, பக்தர்கள் கூட்ட நெரிசலை சமாளிக்க வெள்ளி, சனி ஞாயிறு நாளில் மதியம் 2 மணி வரை நடை திறக்கப்படுகிறது என மழுப்பலாக கூறினர்.

இதுகுறித்து திருச்சி கோபிஆச்சார் கூறுகையில் : ராமேஸ்வரம் கோயில் புனித தலமா, பொருட்காட்சி கூடமா, இக்கோயிலை வணிக தலமாக மாற்றி, வருவாய் பெருக்கும் நோக்கில் அதிகாரிகள், பல நூறு ஆண்டுகளாக கடைப்பிடித்த ஆகம விதியை மீறி மதியம் 2 மணி வரை நடைசாத்தாமல் இருப்பது வேதனைக்குரியது. அதிகாரிகள் செயல்பாடு திருப்தியாக இல்லை. இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; தீபாவளிக்கு ராம ஜென்மபூமி தயாராகி வருகிறது, ஸ்ரீ ராமர் மந்திரின் முதல் தளத்திலிருந்து ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar