பாவூர்சத்திரம்:கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு கீழப்பாவூர் தெப்பக்குளம் அலமேல்மங்களா - பத்மாவதி சமேத பிரஸன்ன வெங்கடாசலபதி கோயிலில் உள்ள நரசிம்மருக்கு மாலையில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.