Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சவுபாக்கியம் அருளும் ... வேண்டாம் பொறாமை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மணவாழ்வு தரும் மகாதேவர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2022
10:10

பிரிந்த தம்பதியர் சேரவும், மகிழ்ச்சியான மணவாழ்வு அமையவும் வேண்டுமா... வாருங்கள் கேரளா பெருவனம் இரட்டையப்பன் கோயிலுக்கு...

ஒரு காலத்தில் காடாக இருந்த இப்பகுதியில் பூரு மகரிஷி தவமிருந்தார். மகிழ்ந்த சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் காட்சியளித்து சிவலிங்கம் ஒன்றை கொடுத்தார்.  அந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய விரல்களால் மூன்று கோடுகளை தரையில் இட்டு குளம் ஒன்றை உருவாக்கினார் மகரிஷி.  அது தொடுகுளம் எனப்பெயர் பெற்றது. குளத்தில் நீர் வற்றினால் இன்றும் அக்கோடுகளைக் காணலாம்.  ஒரு முறை மகரிஷி  நீராடச் செல்லும் போது லிங்கத்தை அருகிலுள்ள ஆலமரத்தின் மீது வைத்தார்.  திரும்பி வந்த போது அதனை எடுக்க முடியவில்லை. அதன்பிறகு படிகள் அமைத்து அதன் மீதேறி சிவபெருமானை வழிபட்டார். இப்போதும் இந்தப்படிகள் வழியே சென்று மூலவரை தரிசிக்கலாம். பூருமகரிஷி தவம் செய்ததால் இத்தலம் பூருவனம் என அழைக்கப்பட்டு பின்னர் பெருவனம் என்றானது.

இங்கு பரசுராமர் வழிபட்ட சிவலிங்கம் ஒன்றும் உள்ளது. ஒரே கோயில் வளாகத்தில் இரு சிவன் சன்னதிகள் இருப்பதால் இதனை இரட்டையப்பன் கோயில் என்கின்றனர்.  மூன்றடுக்குக் கோபுரங்கள் உள்ளன.  இங்கு சுவாமி மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். கருவறை உயரமான இடத்தில் இருப்பதால் மாடத்திலப்பன், மகாதேவர் என்றும்  அழைக்கின்றனர். பார்வதிதேவி, தட்சிணாமூர்த்தி, கணபதி, கிருஷ்ணன், சாஸ்தா சன்னதிகள் உள்ளன.  தினசரி ஐந்து காலபூஜை நடக்கிறது. திருமணத்தடை அகலவும், பிரிந்த தம்பதியர் சேரவும், புதிய தொழில் தொடங்கவும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.  கேரளக் கோயில்களில் பூரம் திருவிழா நடக்க இக்கோயிலே மூலக்கோயில்.  இப்பகுதியில் உள்ள கோயில்களில் திருவிழா தொடங்கும் முன்பு இங்கு அனுமதி பெறுவது வழக்கம்.   

எப்படிச்செல்வது
திருச்சூரிலிருந்து திர்ப்பறையார் செல்லும் வழியில் 11 கி.மீ.,

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar