* பசுவை தெய்வமாகப் போற்றுவது நம் மரபு. பசுவின் உடலில் ஈரேழு பதினான்கு உலகங்களும் அடங்கியுள்ளன. * கோயிலில் விஸ்வரூப தரிசனத்தின்போது, பெருமாள் சன்னதி நோக்கி பசுவின் பிருஷ்ட பாகம்(பின்புறம்) இருக்கும்படி செய்கிறார்கள். இதற்கு காரணம் மகாலட்சுமி அங்குதான் தங்கியிருக்கிறாள். * பசுவானது கன்றை ஈனும் போது முப்பத்து முக்கோடி தேவர்களும் அதை வணங்குவர். அந்த நேரத்தில் நாமும் பசுவை மூன்று முறை வலம் வந்தால் நினைத்தது நிறைவேறும். * காலையில் எழுந்ததும் மங்கள ரூபியான பசுவைத் தரிசித்தால் துன்பங்கள் மறையும். * தினமும் கோபூஜை செய்பவர் மகாவிஷ்ணுவின் அருளைப் பெற்று மகிழ்வர். * தீய கனவுகளால் அவதிப்படுவோர் காலையில் பசுவுக்கு வாழைப்பழம் கொடுத்து வலம் வந்தால் பிரச்னை தீரும். * கன்று சேர்த்து பசுவை வழிபட்டால் பலன் இரட்டிப்பாக கிடைக்கும். * கிரக தோஷம், நோயால் அவதிப்படுவோர் பசுதானம் செய்வது சிறப்பு.