புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவில் நேற்று கருடசேவை நிகழ்ச்சி நடந்தது.முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நாற்பத்து ஒன்றாம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 20ம் தேதி துவங்கியது. நேற்று திருமஞ்சன விழா நடந்தது. விழாவை முன்னிட்டு காலை ஹயக் ரீவருக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. இரவு சேவை சாற்றுமுறை செய்யப்பட்டு கருட வாக னத்தில் ஹயக்ரீவர் அலங்காரத்துடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சேவை சாற்றுதல் நடந்து ஹனுமன் வாகன வீதியுலா இன்று நடக்கிறது. விழா ஏற்பாடு களை கோவில் சிறப்பு அதிகாரிகள் செய்து வருகின்றனர்.