Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூரிய கிரகணம்: அக்.25ல் பண்ணாரி கோவில் ... திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி பூர விழா திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குடும்பம் விருத்தி.. தொழில் முன்னேற்றம் பெற இன்று வீட்டில் எம தீபம் ஏற்றுங்க..!
எழுத்தின் அளவு:
குடும்பம் விருத்தி.. தொழில் முன்னேற்றம் பெற இன்று வீட்டில் எம தீபம் ஏற்றுங்க..!

பதிவு செய்த நாள்

22 அக்
2022
08:10

தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும், சொத்துகள் சேரும். அனைத்துவிதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும். மாகாளய பட்சத்தில் பூலோகத்துக்கு உங்கள் முன்னோர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு மாஹாளய அமாவாசை அன்று நீங்கள் திதி கொடுத்து இருப்பீர்கள். அப்படி வந்த அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது “எம தீபம்” என சாஸ்திரம் கூறுகிறது. அத் தீபத்தை நீங்கள் தீபாவளிக்கு முன்பு வருகிற திரயோதசி திதியில் ஏற்ற வேண்டும். எம தீபம் ஏற்றி முன்னோர்களுக்கும் வழிகாட்டி உதவுவது அந்த வருடம் முழுவதும் நல்ல பலன்களைத் தரும் என்பது ஐதீகம். எம தீபமானது துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது. அவர்கள் பிரச்சினைகள் ஏற்படுத்துவதை நிறுத்திவிட்டு, உங்களுக்கு நலன்களைச் செய்வார்கள்.

சாத்திரப்படியான எம தீபம் ஏற்றும் முறை:

உங்கள் வீட்டின் உயரமான பகுதியில் கிளியாஞ்சட்டியில் எம தீபம் ஏற்றப்பட வேண்டும். முடியாதவர்கள் வீட்டு வாசலில் ஏற்றலாம். விளக்கேற்றிய பின்னர், உங்கள் முன்னோரை மனதில் ஓரிரு நிமிடங்கள் நினைக்க வேண்டும். பின்னர் கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும்.

ஸ்ரீ எமாய நம: எமாய தர்ம ராஜாய
ம்ருத்யவே சாந்த காயச
வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச

ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே!
வ்ருகோதராய சித்ராய
சித்ரகுப்தாய வை நம:
சித்ரகுப்தாய வை ஓம் நம இதி: என சொல்ல வேண்டும். அப்படி சொல்ல  இயலாதவர்கள் சிவாய நமஹ, என சொல்ல வேண்டும் விளக்கு தானாக அணைய வேண்டும். அணைந்த விளக்கை வீட்டிற்குள் கொண்டு வரக் கூடாது. கால் படாத இடத்தில் போட வேண்டும். இந்த வருடம் இன்று (22.10.22) சனிக்கிழமை மாலை 5.28 மணிக்கு திரயோதசி திதி ஆரம்பிக்கிறது.
நாளை ( 23.10.22) ஞாயிற்றுக்கிழமை மாலை 5.49 மணிக்கே திதி முடிந்து விடுவதால் சனிக்கிழமை  மாலையே எம தீபம் ஏற்றலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar