Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வரகுனேஸ்வரர் கோயிலில் மண்டலாபிஷேக ... பொங்காளியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் நாளை சூரசம்ஹாரம்: நாளை ரோப்கார், விஞ்ச் நிறுத்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2022
07:10

பழநி: பழநி, கந்தசஷ்டி விழாவில் நாளை சூரசம்ஹார திருவிழா மலைக்கோயில் கிரி வீதியில் நடைபெற உள்ளது. பழநிகோயிலில் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி திருவிழா அக்.25., துவங்கியது. கந்த சஷ்டி திருவிழாவில் நாளை அக்.,30.,ல் மலைக்கோயிலில் அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெறும்.

வின்ச், ரோப்கார் சேவை நிறுத்தம்: மலைக்கோயில் சென்று வர பயன்படும் வின்ச், ரோப்கார் சேவைகள் காலை 10:00 மணி முதல் இயங்காது. மலைக்கோயிலில் அனைத்து கட்டண சீட்டுகளும் காலை 11:00 மணிக்கு நிறுத்தப்படும். பக்தர்கள் 11:30 வரை பக்தர்கள் படிப்பாதையில் அனுமதிக்கப்படுவர். மதியம் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். அதன்பின் மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்குதல் நடைபெற்று, கோயில் நடை அடைக்கப்படும்.

கிரிவீதியில் சூரசம்ஹாரம்: பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமி, மயில்வாகனத்தில் அடிவாரம், திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்வார். மலைக்கோயில் இருந்து இறங்கிய சின்னகுமாரசுவாமி மாலை 6:00 மணிக்கு மேல், வடக்கு கிரி வீதியில் தாரகாசுரன், கிழக்கு கிரிவிதியில் பானு கோபன், தெற்கு தெரு வீதியில் சிங்கமுகாசூரன், மேற்கு கிரிவீதியில் சூர பத்மன் என நான்கு சூரசம்ஹாரம் நடைபெறும். அதன் பின் ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா நடைபெறும். இரவு 9:00 மணிக்கு மேல் சம்ரோட்சன பூஜைக்கு பின் அர்த்தஜாம பூஜை நடைபெறும்.

திருக்கல்யாணம்: அக்.,31.அன்று காலை 9.30 மணிக்கு மேல் மலைக்கோயிலில் வள்ளி, தேவசேனா சமேத சண்முகருக்கும் மாலை 7:00 மணிக்கு மேல் பெரிய நாயகி அம்மன் கோவிலில் வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். நிகழ்ச்சி ஏற்பாடுகள் இணை கமிஷனர் நடராஜன் தலைமையில் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar