Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமநாதபுரத்தில் கந்த சஷ்டி விழா: ... திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: கடற்கரையில் குவியும் பக்தர்கள் திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிக்கலில் வேல் வாங்கிய சிங்காரவேலவருக்கு ‘வியர்த்த மகிமை’: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
சிக்கலில் வேல் வாங்கிய சிங்காரவேலவருக்கு ‘வியர்த்த மகிமை’: பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

29 அக்
2022
11:10

நாகப்பட்டினம்: நாகை அடுத்த சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில், கந்தசஷ்டி விழாவினை முன்னிட்டு,திருச்செந்துாரில் சூரனை சம்ஹாரம் செய்வதற்காக,சிங்காரவேலவர் அன்னை வேல் நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கும் போது,முருகப்பெருமானின் மேனியெங்கும் வியர்க்கும் மகிமை நடந்தது.

நாகை அடுத்த சிக்கலில்,அறுபடை வீடுகளுக்கு இணையான  சிங்காரவேலவர் கோவில் உள்ளது. முருகப்பெருமானின் அவதார நோக்கமான, சூரசம்ஹாரத்திற்கு,இக்கோவிலில் தான்,முருகப்பெருமான், அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கி,திருச்செந்துாரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்தபுராணம் கூறுகிறது.

சமயக்குரவர்களால் பாடல் பெற்ற இக்கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 24 ம் தேதி துவங்கியது. நாள்தோறும் ஆட்டு கிடா, தங்கமயில், ரிஷபம் போன்ற பல்வேறு வாகனங்களில், முருகப்பெருமான் தேவியர்களுடன் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கந்த சஷ்டியின் 5 ம் நாள் விழாவான இன்று சிங்காரவேலர் தேவியருடன் அதிகாலை திருத்தேரில் எழுந்தருளி வீதியுலா வந்தார். திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்வதற்காக, அன்னை வேல் நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சிக்காக திருத்தேரில் வீதியுலா வந்த முருகப்பெருமான் ஆவேசத்துடன் கோவிலுக்குள் வந்து அன்னையிடம் சக்திவேல் வாங்கும்போது ஆக்ரோஷத்துடன் காணப்பட்டார். அன்னையிடம் சக்திவேலை பெற்று தனது சன்னதியில் அமர்ந்த முருகப் பெருமானுக்கு, மானிடருக்கு வியர்ப்பது போல் திருமேனியெங்கும் வியர்வை பொழியும் மகிமை நடந்தது. முருகப்பெருமானின் ஆக்ரோஷ வெப்பத்தை தாங்கிக் கொள்ள இயலாமல், சன்னதியின் சுவர்களிலும் வேர்வைத் துளிகள் அரும்பியிருந்த காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில் சித்திரை மாத பிரம்மோத்சவம், கடந்த 13ம் தேதி ... மேலும்
 
temple news
பொன்னேரி; பொன்னேரி, திருவாயற்பாடி சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் மற்றும் பாஷ்யகார ஸ்வாமி கோவில் உள்ளது. கடந்த, ... மேலும்
 
temple news
திருநீர்மலை; பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், பிரசித்திபெற்ற ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar