Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி ... திருச்செந்துாரில் சூரசம்ஹாரம் கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் திருச்செந்துாரில் சூரசம்ஹாரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா: கிரி வீதியில் சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:
பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா: கிரி வீதியில் சூரசம்ஹாரம்

பதிவு செய்த நாள்

31 அக்
2022
07:10

பழநி: பழநி, கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹார திருவிழா மலைக்கோயில் கிரி வீதியில் நடைபெற்றது.

பழநிகோயிலில் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி திருவிழா அக்.25., துவங்கியது. கந்த சஷ்டி திருவிழாவில் இன்று (அக்.,30.,) மலைக்கோயிலில் அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. மதியம் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்றது. அதன்பின் மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்குதல் நடைபெற்று, கோயில் நடை அடைக்கப்பட்டது. சஷ்டி விரதம் இருந்த முருக பக்தர்கள் வாழை தண்டு, பழங்கள், காய்கறிகள், கலந்த படையலை வைத்து கந்த சஷ்டி கவசம் பாடி முருகனை வழிபட்டனர். அதன் பின் ஆறு நாட்கள் உபவாசம் இருந்த பக்தர்கள் படைக்கப்பட்ட தண்டை உட்கொண்டனர். பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து வள்ளி, தேய்வானை உடன் முத்துக்குமார சுவாமி, மலைக்கோயில் இருந்து சின்னகுமாரசுவாமியும் அடிவாரத்தில் எழுந்தருளினர். பராசக்தி வேல் மலையிலிருந்து இறங்கி திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் வந்து அடிவாரம் சென்றடைந்தது. அதன்பின் இரவு 7:15 மணிக்கு மேல் கிரிவீதியில் தாரகாசுரன், பானுகோபன், சிங்கமுகாசூரன், சூரபத்மன்வதம் என பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் சூரசம்ஹாரம் நடைபெற்றது. அதன்பின் ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா நடைபெற்றது. மலைக்கோயிலில் இரவு சம்ரோட்சன பூஜைக்கு பின் அர்த்தஜாம பூஜை நடைபெற்றது. இன்று (அக்.,31) காலை 9.30 மணிக்கு மேல் மலைக்கோயிலில் வள்ளி, தேய்வானை உடன் சண்முகருக்கும் மாலை 7:00 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி, தேய்வானை உடன் முத்துக்குமாரசுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த கிருத்திகை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வேகவதி ஆற்றங்கரையோரம், 16ம் நுாற்றாண்டின் விஜயநகரப் பேரரசு கால சதிகல் சிற்பம் ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், மங்கள வேல் வழிபாடு நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பல்லி சிலைகள் மாற்ற முயற்சி நடப்பதாக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பணாமுடீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகளால் சிற்பங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar