பதிவு செய்த நாள்
27
ஆக
2012
10:08
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள பூண்டி மாதா பேராலயம், இந்தியாவில் உள்ள பத்து கத்தோலிக்க கிறிஸ்துவ பசிலிக்காவில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் கன்னி மரியாவின் பிறப்பு பெருவிழா ஆகஸ்ட் 30ம் தேதி முதல் செப்டம்பர் ஒன்பதாம் தேதி வரை நடக்கும்.இந்தாண்டு திருவிழாவை குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி ஆகஸ்ட் 30ம் தேதி மாலை ஐந்து மணிக்கு கொடியேற்றி துவக்கி வைத்து, திருப்பலி நிறைவேற்றுகிறார். 31ம் தேதி முதல் செப்டம்பர் ஏழாம் தேதி வரை நடக்கும் திருப்பலி பூஜைகளை பங்கு தந்தையர்கள் கோவை நல்லாயன், மருத்துவக்கல்லூரி இருதயராஜ், ஆந்திரா தியான மைய சிரில், வால்பாறை ஜெரோம், ஊட்டி ஜெய அருள்ரான், கோவை சாயத்துறை ஆல்பர்ட் ஆனந்த், பூந்தமல்லி திருஇருதய குருமடம் அமிர்தசாமி, சிவகங்கை மேய்ப்பு பணி நிலையம் பாக்யநாதன் ஆகியோர் நடத்தி வைக்கின்றனர். எட்டாம் தேதி மாலை ஆறு மணிக்கு குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி மறையுரை மற்றும் அருளாசி வழங்குகிறார். இரவு ஒன்பது மணிக்கு பூண்டி மாதாவின் அங்கார தேர்பவனி நடக்கிறது. ஒன்பதாம் தேதி குருமார்கள் திருவிழா கூட்டு திருப்பலி நடக்கிறது.விழா ஏற்பாடுகளை பேராலாய அதிபர் மற்றும் பங்குதந்தை செபாஸ்டின், து ணை அதிபர் அருள்சாமி, ஆன்மிக தந்தையர்கள் சூசைமாணிக்கம், மரியதாஸ், உ தவி தந்தையர்கள் பாஸ்டின்பிரிட்டோ, சின் னப்பன் ஆகியோர் செய்து வருகின்றனர்.